அல்லைப்பிட்டியில் நடந்த தீ விபத்து - பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!
அல்லைப்பிட்டி - மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதருக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ மூட்டிய காரணத்தினால் அங்கிருந்த புற்றரைகள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(27.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள
தீ வேகமாக பரவிய காரணத்தினால் உருவான புகை வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் வீதியின் பிரதான போக்குவரத்து வீதியில் இவ்வாறு தீ பரவுவதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் கொண்டு வந்து தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வெப்பமான காலனிலையால் நீர் வளம் வேகமாக வற்றி வரும் நிலையில் புற்களும் சருகாகி, வேகமாக தீ பரவியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தீமூட்டல் செயல்களை செய்வோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri