பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், முன்னாள் தவிசாளர்களான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துக்கொண்டிருந்தனர்.
வேட்புமனு
மேலும் அவர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம், புனித திரேசாள் தேவாலயம் மற்றும் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றில் சமயாசார வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மேற்படி சபைக்கான வேட்புமனு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





