அஜித் நிவாட் கப்ராலுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்து வழக்கு தாக்கல்
இலங்கை மத்திய வங்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை ஓய்வூதியம் வழங்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆரியவன்ச திஸாநாயக்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை நாணய சபை, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை நாணய சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால், மத்திய வங்கியின் முன்னைய ஆளுநர்களைப் போன்று, ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிதிச்சட்டம், ஊழியர்களுக்கு சம்பளத்தை அங்கீகரிக்க மட்டுமே விதிமுறைகளை வழங்கியுள்ளது, இந்த சட்டத்தின்படி ஆளுநர் ஊழியர்களில், ஒரு உறுப்பினராக கருதப்படுவதில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவருக்கு, மிக உயர்ந்த சம்பளம் கிடைக்கின்றது.
ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்ட நிதிச்சட்டத்தின் கீழ் அனைத்து, உயர்தர ஆடம்பரங்கள், இரண்டு சொகுசு கார்கள் கொண்ட உத்தியோகபூர்வ இல்லம் , பாதுகாவலர்கள், வாகன ஓட்டுநர்கள், உள்நாட்டு பணியாளர்கள், முதல் தர விமான டிக்கெட்டுகளுடன் இலவச வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், சிறந்த நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் வியக்கத்தக்க வகையில் வரம்பற்ற அளவில் சர்வதேச கடன் அட்டைகளுக்கு அவர் உரித்துடையவர்.
அஜித் நிவர்ட் கப்ரால் இந்த ஆடம்பரங்களை 2006, ஜூலை 6 முதல், 2015, ஜனவரி 8 ஆம் திகதி வரை கிட்டத்தட்ட 8-1/2 வருட காலத்திற்கு வரி செலுத்துவோரின் செலவில், அனுபவித்துள்ளார்.
எனவே, மத்திய வங்கியின் கடந்த கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியத்தை இலங்கை நாணய சபை அங்கீகரித்ததும், கப்ராலுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான, முடிவு சட்டத்தில் முடிவை எடுக்கவுள்ளதும் மோசமானது மற்றும் நிதிச்சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு முரணானது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.