காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் குறித்த கப்பல் சேவையானதுஎதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் சேவை
அத்துடன் வழமைபோல் செவ்வாய்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவையானது இடம்பெறும்.

www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.