சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து ரிஷாட்டிற்கு அச்சம்! - அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
இதனை தெரிந்துகொண்ட ரிஷாட், அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுவிட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார், தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் வீட்டில் வைத்து மரணமடைந்த சிறுமி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏன் வாய்திறக்கவில்லை.
ரிஷாட்டுக்கு எதிராக சதொசவில் கோடிக்கணக்கான பண ஊழல் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ரிஷாட்டை ஏன் தண்டிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறே அமைதியாக இருங்கள். நாங்கள் சரியான நேரத்தில், உரிய வகையில் ஆதாரங்களை திரட்டி, வழக்குத் தொடர்வோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 அகவை சிறுமி மரணமானமை தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மூன்று பேரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்குமாறு சேவை வழங்குநர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தொலைபேசி பதிவுகளுக்கு மேலதிகமாக, சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 அகவை சிறுமி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஜூலை 03ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 நாட்களின் பின்னர் குறித்த சிறுமி உயிரிழ்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
