மகனை கொடூரமாக பொல்லால் தாக்கி கொலை செய்த தந்தை
குளியாப்பிட்டி – கடவளகெதர பகுதியில் வீடொன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த மகனை கொடூரமாக தாக்கி தந்தையொருவர் கொலை செய்துள்ளார்.
முனமல்தெனியவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் மதுபோதையில் தனது தந்தையை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, தந்தையினால் பொல்லால் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த குறித்த இளைஞர், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |