தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்ப்பில் வேலன் சுவாமிகள் விசேட கோரிக்கை
தமிழ் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு அமையும் என நம்புவதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
1976ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு தொடர்பிலான மாவட்ட ரீதியாக கலந்துரையாடலில் முதல் கலந்துரையாடல் நேற்று(25.04.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தந்தை செல்வாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்பமானது.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அருட்தந்தை ஜோசப்மேரி அடிகள், அருட்பணி ஜெகதாஸ் அடிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, வவுணதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, சமூகசெயற்பாட்டாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மற்று சங்க உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

50ஆவது நிறைவை முன்னிட்டு மாநாடு ஏற்பாடு
எதிர்வரும் 2026 மே மாதம் 30ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், நாங்கள் அனைவரும் ஒரே இலக்குக்காக இணைந்து செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையிலே இந்த மே 30ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாநாடானது வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு.
தமிழர் தாயகத்திலே இருக்கின்ற தமிழ்த்தேசியத்திற்காக தங்களை உண்மையிலேயே அர்ப்பணித்திருக்கின்ற உண்மையான செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கே ஒருங்கிணைத்து அந்த மாநாட்டிலே நடாத்தப்படுகின்ற உரைகள் ஊடாக மற்றும் ஏனைய மேடை அரங்க நிகழ்வுகள் ஊடாக தமிழ்த்தேசிய அறிவையும் இன்றைய தேவையையும் தமிழின உணர்வையும் ஊட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவும், அதனைத் தொடர்ந்து இந்த மாநாடு நிறைவடைந்ததும் இந்த மாநாட்டிலே ஒரு நூலையும் வெளியிட உத்தேசித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26.04.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் - தீபன்







பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam