கிளிநொச்சியில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகிய பெற்றோர்: தந்தை மரணம் (video)
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தந்தை ஒருவர் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (18.04.2023) நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பிச்சைமுத்து இராமசாமி (66 வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தந்தை, தாய் மற்றும் மகனுக்கு
இடையில் ஏற்பட்ட கைகளப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த
நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே
உயிரிழந்துள்ளார்.
தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
