தமிழர் பகுதியில் நடந்த சோகம் : மகனை காப்பாற்றும் முயற்சியில் பலியான தந்தை
அம்பாறையிலுள்ள வீடொன்றில் வைத்து ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு பெண் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேரதுராவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மகனுடன் ஏற்பட்ட பழைய தகராறு காரணமாக சிலர் வீட்டிற்கு வந்து தாக்கியுள்ளனர்.
சந்தேகநபர் கைது
அப்போது, தந்தை குறுக்கிட்டு மகனை காப்பாற்ற முயற்சித்த நிலையில், அவரையும் சந்தேக நபர்கள் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |