வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத் நிஷாந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை
குளவி தாக்குதலில் இருந்து தனது மகனை பாதுகாக்க தந்தை தனது சட்டையைக் கழற்றி தனது மகனை சுற்றிக் கட்டியுள்ளார்.

ஏராளமான குளவி கொட்டுதல்களால் காயமடைந்த தந்தையை உள்ளூர்வாசிகள் மிஹிந்தலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 11 வயது மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மகனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், மகனும் உயிரிழந்த தந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.