நிதி அமைச்சர் பசில் போன்று வேடமணிந்து வந்த நபர்! தம்புள்ளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
உரத் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று தம்புள்ளை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
தம்புள்ளை நகரத்தின் மத்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் வரை பயணித்தது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின்(Mahindananda Aluthgamage) கொடும் பாவி எரிக்கப்பட்டது.
அத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தோற்றத்தில் வேடமணிந்து வந்த நபரைத் தாக்கியும் பொது மக்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.