மட்டக்களப்பில் யானை தாக்குதலால் விவசாயி பலி
மட்டக்களப்பு வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(01.05.2025) இடம்பெற்றுள்ளது.
நாவற்காடை சேர்ந்த 70 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்ற குறித்த நபர், காலையாகியும் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அப்பகுதியில் நீண்ட காலமாக உலாவி திரியும் காட்டு யானையால் இவர் தாக்கப்பட்டு பரிதாபகரமாக மரணித்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி - ருசாத்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam