மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று வியாழக்கிழமை (07.11.2024) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது, அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri
