விவசாயத் துறையில் இலங்கையில் விவசாயி ஒரு கோடி ரூபாவை வருமானமாக பெற்று சாதனை (Photos)
அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார்.
இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை ஏக்கரில் மிளகாய்ச் செய்கையை ஆரம்பித்துள்ளார்.
ஜனவரி 14 வரை மிளகாய் அறுவடை
முன்னதாக மிளகாய்ச் செய்கையில் அதிக அறுவடை வருமானம் பெற்ற இரண்டு விவசாயிகள் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் 50 முதல் 60 இலட்சம் வருமானத்தை பெற்றனர்.
ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட புளியங்குளத்தை சேர்ந்த பந்துல காமி என்பவர் 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய மிளகாயின் சந்தை விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனவரி மாதம் 14 வரை மிளகாய் அறுவடை செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
