பிரதமருக்கு சிகிச்சை அளிக்க பிரித்தானியாவில் இருந்த வந்த பிரபல மருத்துவ நிபுணர்
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் (Prof. Hilali Noordeen) அண்மையில் இலங்கை வந்ததாக தெரியவந்துள்ளது.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் என்பவர் பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான எலும்பியல் மற்றும் முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணராவார்.
பேராசிரியர் கடந்த திங்கள் கிழமை இலங்கைக்கு வந்துள்ளதுடன் கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை செய்துள்ளார்.
பேராசிரியர் நூர்தீனுடன் மேலும் ஒருவர் மயக்க மருந்து நிபுணரும் வந்திருந்ததுடன் பிரதமருக்கு சிகிச்சை அளித்த பின்னர் இருவரும் அன்றிரவே பிரித்தானியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் இலங்கை வந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை அளித்தமை தொடர்பான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.