மன்னாரில் குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி (வயது 48 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அவரது சகோதரியினால் இன்றையதினம்(16.4.2026) முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
நேற்றைய தினம்(15) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரிந்தவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையம் அல்லது அவரது உறவினர்களின் தொலைபேசி இலக்கத்துடன் (0770699042) தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri