பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை
குருநாகல்(Kurunegala) பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல, தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
எல்லை மீறிய தகராறு
மேற்படி நபர் இளைஞர் ஒருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

குறித்த தகராறு எல்லை மீறியதில் இளைஞர், மேற்படி நபரைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து சந்தேகநபரான 30 வயதுடைய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan