தெரியாதவர்கள் கொடுத்த கேக்கை உட்கொண்ட குடும்பம் வைத்தியசாலையில்

Puttalam Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Crime
By Aanadhi Jul 16, 2023 09:17 AM GMT
Report

அறிமுகமற்ற நபர்கள் கொடுத்த குளிர்பானம் மற்றும் கேக்கை உட்கொண்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்வபம் புத்தளம் நகரை அண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நகரை அண்மித்த பிரதேசமொன்றில் வசிக்கும் 65 வயதுடைய முடி திருத்துனர், மற்றும் அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், முடிதிருத்துனரின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் இவ்வாறு மயக்கமுற்று, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தெரியாதவர்கள் கொடுத்த கேக்கை உட்கொண்ட குடும்பம் வைத்தியசாலையில் | Family Hospital After Eating Cake Given Strangers

நீண்ட காலம் பழகியவர்கள்

புத்தளம் - அனுராதபுரம் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இவர்களின் வீட்டிற்கு இனந்தெரியாத அந்நியர்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

அவ்வாறு வந்த சந்தேகநபர்கள் இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளரிடம் நீண்ட காலம் பழகியவர்கள் போன்று நட்பாக உரையாடி, குறித்த நபருக்கு நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50,000 ரூபாவை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உரிய காசோலையை வழங்குவதற்கு முன், அந்த நபர்கள் கொண்டு வந்துள்ள குளிர்பானம் மற்றும் கேக்கை உட்கொண்டு, அதைப் படம் பிடித்து, காசோலை வழங்கத் தயாராக உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, அவர்களின் கோரிக்கையை ஏற்று வீட்டில் இருந்தவர்கள் கேக் வெட்டி உட்கொண்டு, குளிர்பானத்தை அருந்தவும் செய்துள்ளனர்.

தெரியாதவர்கள் கொடுத்த கேக்கை உட்கொண்ட குடும்பம் வைத்தியசாலையில் | Family Hospital After Eating Cake Given Strangers

தங்கை விழுந்துவிட்டாள்

ஆனால், வீட்டின் உரிமையாளரான முடிதிருத்துனர் ஒரு சிறிய துண்டு கேக்கை மட்டும் சுவைத்ததாகவும், குளிர்பானத்தை அருந்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையில், இனந்தெரியாத நபர்கள் கொண்டு வந்த கேக் மற்றும் பானங்களைக் குடித்துவிட்டு, சிறிது நேரத்தில் மனைவி, மகள், தந்தை மற்றும் தாய் மயங்கி விழுந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளரான முடிதிருத்துனர், உடனடியாக புத்தளம் நகரில் வேலை செய்யும் மூத்த மகளுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "தங்கை விழுந்துவிட்டாள்" என்று கூறுவதற்கிடையில் அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

அவர் தன் மகளுக்கு போன் செய்ததையடுத்து பதற்றத்துடன் வீட்டுக்கு வந்த இரண்டு அந்நிய சந்தேக நபர்களும் வேகமாக வீட்டை விட்டு ஓடியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தெரியாதவர்கள் கொடுத்த கேக்கை உட்கொண்ட குடும்பம் வைத்தியசாலையில் | Family Hospital After Eating Cake Given Strangers

பொலிஸார் விசாரணை

தந்தையின் தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காததால் கவலையடைந்த மூத்த மகள் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு விரைந்து வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டில் அனைவரும் மயங்கிக் கிடந்ததை அடுத்து கத்தி சத்தமிட்டு, அக்கம்பக்கத்தினரை வரவழைத்து தன் குடும்ப அங்கத்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது பாதிப்புக்குள்ளான ஐவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US