இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
நாட்டில் கடந்த இரு தினங்களாக இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 816 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,446 ஆக அதிகரித்துள்ளது.
அதற்கமைய இதுவரையில் நாட்டில் 266 211 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 234 942 பேர் குணமடைந்துள்ளதோடு , 28 033 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்படி நாட்டில் இன்று 32 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவை நேற்று முன்தினம் பதிவானவையாகும்.
இவ்வாறு உயிரிழந்த 32 பேரில் 14 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3268 ஆக உயர்வடைந்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
