பேக்கரி உற்பத்திகளுக்கான கேள்வியில் வீழ்ச்சி
பேக்கரி உற்பத்திகளுக்கான கேள்வியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாணின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளுக்கான கேள்வி குறைந்துள்ளது.
பாண் விலை அதிகரிப்பிற்கு முன்னர் காலை வேளையில் 250 இராத்தல் பாண் விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்பொழுது அந்த எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு பேக்கரி உற்பத்திகளின் அளவினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |