பொலிஸார் போன்று வேடமணிந்து வீட்டினுள் நுழைந்த மூவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி
குருநாகல் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படும் மூவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரவத்தை பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரிந்து அதே இடத்தில் உள்ள தொழிலாளர் இல்லத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 25ஆம் திகதி இரவு தானும் தனது குடும்பத்தாரும் வீட்டில் இருந்த போது மூன்று பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டைகளை சரி சரிபார்த்தவுடன் அவர்களின் ஆடைகளை கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை முறைப்பாட்டாளர் அடையாளம் காணவில்லை என கூறியுள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
