கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி - விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் பல்வேறு நபர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போலி கடவுச்சீட்டு
வெளிநாட்டில் இருக்கும் கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam
