திரிபடைந்த கோவிட்வைரஸ் சமூகத்தில் இருக்கக்கூடும் - மருத்துவ நிபுணர்கள்
திரிபடைந்த புதிய கோவிட் வைரஸ் தொற்று சமூகத்தில் இருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் பிரதம தொற்று நோய் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றுடைய நபர்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த அனைவரிடமும் பரிசோதனைகள் நடாத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய திரிபைக் கொண்ட கோவிட்தொற்றாளி தனிமைப்படுத்தல் நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர்கள் சமூகத்தில் நடமாடியக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் அதனை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.