இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் சந்தையில் கிடைக்கும், மனிதனுக்கு ஆபத்தான பல்வேறு தோல் பூச்சுக்கள்(கிரீம்கள்)மற்றும் விசிறல்கள் (லோசன்கள்) தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த தோல் கிரீம்கள் மற்றும் லோசன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வரம்பு
இதனையடுத்து நுகர்வோர் விவகார ஆணையகம், இது தொடர்பில் ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளையும், அவற்றின் முத்திரைப் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
எனவே அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோசன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.



முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam