ராஜபக்ச அரசுக்குள் உச்சக்கட்ட மோதல்! - சு.கவுக்கு சஜித் அணி அழைப்பு
ராஜபக்ச அரசுக்குள் இன்று உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகள் வெவ்வேறான வழிகளில் பயணிக்கின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இணையலாம்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- "
ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் மோதல் எதுவும் இல்லை என்ற போதிலும் அத்தகையதோர் நிலைமையைத் தோற்றுவிப்பதற்குச் சிலர் முற்படுகின்றனர்.
இன்று அரசுக்குள்தான் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகள் வெவ்வேறான வழிகளில் பயணிக்கின்றன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
எம்முடன் இணையலாம். அவர்களுடன் பயணிப்போம்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்(Maithripala Sirisena) எவ்வித கொடுக்கல் –
வாங்கல்களும் கிடையாது. அவருடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை" -
என்றார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam