இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு
இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டு அனைத்து வகை விசாக்களும் கடந்த 11 ஆம் திகதி முதல் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி செல்லுப்படியாகும் காலம் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்திற்கான விசா கட்டணங்கள் அறவிடப்படும் என்பதுடன் மேலதிக அபராதத்தில் இருந்து விலக்களிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.