கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் மெய்பாதுகாவலருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்னாள் கடந்த யூன் 21 ம் திகதி பொதுமகன் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய் பாதுகாவலரை தொடர்ந்து எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று(04) இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த துப்பாகிச்சூட்டுச் சம்பவத்தில் ஊறணியைச் சோந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது தொடர்ந்து 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
