முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நிமைனவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா பொலிஸாரினால் கடந்த மார்கழி 27ம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் இணைய வழியில் 12ம் மாதம் 20 திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையின் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கை
சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் 1 வருடங்கள் கடந்தும் வழக்கு விசாரணை
ஒத்திவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri