போதைப் பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் கைது
கொழும்புக்கு(Colombo) அருகே போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொத்தட்டுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் சோதனைக்காக சென்றிருந்த கலால் திணைக்கள ஊழியர்கள் அங்கிருந்த பெண்ணொருவரைத் தாக்கி , உடைகளையும் கிழித்துள்ளதாக குறித்த பெண் கொத்தட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஊழியர்களுக்குப் பிணை
அத்துடன் தனது சிறுகுழந்தையையும் கலால் திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கலால் திணைக்கள ஊழியர்கள் ஐவரையும் கைது செய்து நேற்றைய தினம்(20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் கலால் திணைக்கள ஊழியர்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam