7.2ஐ கடந்துள்ள கோவிட் - 19 தொற்று வீதம்
இலங்கையில் நேற்று 878 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், கோவிட் - 19 தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து முதல் தடவையாக தொற்று வீதம் 7.2ஐ கடந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று மாத்திரம் 12145 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனவரி மாதத்தில் 3 வீத அதிகரிப்பை காட்டியது. இது இப்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.
அது இப்போது 7 வீதமாக உயர்ந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது அபாயகரமான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri