பங்களாதேஸ் பதவியில் இருந்து விலகிக்கொண்ட இலங்கையின் முன்னாள் வீரர்
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரத்ன(Hashan Tillakaratne), பங்களாதேஸ்(Bangladesh) மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2022 ஒக்டோபரில் இந்த பதவியை பொறுப்பேற்ற திலகரத்ன, பங்களாதேஸ் அணி, அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் வீரர்
எனினும் அந்த சுற்றுப்பயணம் வரை அவரது ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது.
முன்னதாக திலகரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், பங்களாதேஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க உள்நாட்டுத் தொடர் வெற்றியையும், முழு பலம் கொண்ட இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சமநிலையிலும் முடித்தது.
அத்துடன், 2025 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் வெற்றி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றது.
இருப்பினும், உலகளாவிய அரங்கில், குறிப்பாக ஐசிசி போட்டிகளில் பங்களாதேஸ் மகளிர் அணியால் சோபிக்கமுடியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |