மின் கட்டணத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்த முன்னாள் அமைச்சர்: வெளியாகியுள்ள சாட்சியம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மின் சக்தி அமைச்சராக காமினி லொக்குகே தனக்கு விசுவாசமான வர்த்தகர்களின் மின் கட்டணத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ள காமினி லொக்குகே

காமினி லொக்குகே கடிதம் மூலம் இலங்கை மின்சார சபையின் நிறைவேற்று பொறியியலாளர்களுக்கு இவ்வாறு பல அழுத்தங்களை கொடுத்துள்ளதுடன் அதற்கான கடிதங்களும் கிடைத்துள்ளன.
சிக்கியுள்ள சாட்சியங்கள்
நுகேகொடை ஹைலெவல் வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவருக்காக காமினி லொக்குகே அனுப்பிய கடிதம் ஒன்று இதற்கான சாட்சியமாக ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது. இலங்கை மின்சார சபை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெரும் தொகை கடனை செலுத்த வேண்டியுள்ளதுடன் அது முடியாமல் போயுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இப்படியான உத்தரவுகள் பணத்தை செலுத்த முடியாமைக்கான பிரதான காரணங்களாக இருப்பதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri