கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் படுகொலை
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28.10.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனங்காணாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது கை, கால்களைக் கட்டி வைத்து விட்டு அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
பின்னர், அந்த நபர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும் தாக்கி காயப்படுத்தியுள்ள நிலையில், வீட்டின் அலுமாரியில் இருந்த அனைத்து பொருட்களையும் கலைத்து விட்டு கார் ஒன்றையும் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருடப்பட்டதாகக் கூறப்படும் கார் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam