சீன தூதரை சந்தித்த இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகரும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனருமான மிலிந்த மொரகொட, இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹோங்கைச் சந்தித்து, சீன - இலங்கை உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்துள்ளார்.
தூதர் கி யின் இல்லத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்தின்போது, இரு தரப்பினரும் இந்த விவாதிப்பை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
உலகளாவிய நிலைமை, சீன-இலங்கை உறவுகள், சீன முதலீட்டாளர்களுக்கான இலங்கையில் முதலீட்டுச் சூழல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் சீன-இலங்கை ஒத்துழைப்பு ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மொரகொட, தூதர் கி யிடம் விளக்கினார்.
அத்துடன்,தெற்காசியாவுடன் பொதுவாகவும், குறிப்பாக இலங்கையுடனும் தொடர்பு கொள்ள ஆர்வமுள்ள சீன நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற, தமது அறக்கட்டளையின் விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
