வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு(Photos)
நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று(13.11.2022) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு


குறித்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , ஜனாதிபதி சட்டத்தரணியும் கொழும்பு தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் , முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஒன்றினைவதில் உள்ள
சட்டச்சிக்கல்கள் , முன்னாள் போராளிகளின் அரசியல் பிரவேசம் , தற்போது அங்கம்
வசிக்கும் தமிழ் கட்சிகளின் நிலமை , போராளிகளின் நலன்சார்ந்து செயற்படுவது ,
புலம்பெயர் உதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.