ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கப்படும்! - இராணுவத் தளபதி
கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை என அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையிலான குழு, எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பங்குகளை வாங்குவதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 13 மில்லியன் குப்பிக்களை வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு 900,000 குப்பிகள் விரைவில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் 900,000 குப்பிகள் ஃபைசர் தடுப்பூசி ஜூன் இறுதிக்குள் அல்லது ஜூலை தொடக்கத்தில் பெறப்படஉள்ளது என்றும் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
