அனைவரும் ரணில் பக்கமே; அடுத்து ஐ.தே.க. ஆட்சி உறுதி: அகிலவிராஜ் நம்பிக்கை!
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர் என்றும் அடுத்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலேயே மலரும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "சிங்கப்பூரை லீகுவான் மீட்டெடுத்தார்.
மலேசியாவை மகாதீர் முகமது கட்டியெழுப்பினார். தனிநபர்களின் தூரநோக்கு சிந்தனைக்குப் பின்னால் அனைவரும் திரண்டனர். தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர்.

எனவே,
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.
ஐ.தே.க. தலைமையிலேயே புதிய ஆட்சி மலரும்" எனத் தெரிவித்துள்ளார்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam