ஆட்சியில் இருக்கும் அனைவரும் உலக மகா திருடர்கள்! விரக்தியில் அரசாங்கத்தை கடுமையாக சாடும் மக்கள் (VIDEO)
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல பொருட்களின் தட்டுபாடு தொடர்பில் எமது செய்திச்சேவை மக்களின் கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.
எனவே இது தொடர்பில் பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் நிலைமை அழகானது. எங்கு பார்த்தாலும் வரிசைகள்பாண் வரிசை, சீனி வரிசை, அரிசி வரிசை, பருப்பு வரிசை, வெங்காய வரிசை, சகல இடங்களிலும் வரிசைகள். வரிசைகள் இல்லாத இடங்கள் இல்லை.
ஆர். பிரேமதாசவின் காலத்தில் வரிசைகள் இருக்கவில்லை. வேலை நிறுத்தங்கள் நடக்கவில்லை. ஏன் இது. நாட்டின் கீழ் நிலைமை மக்களான நாங்கள் நொறுக்கப்பட்டுள்ளோம். எம்மை நொறுக்க ஆசைப்படுகின்றீர்களா?. எப்போதும் அப்படி செய்ய வேண்டாம். மின்சாரம் இல்லை, டீசல் இல்லை, பெட்ரோல் இல்லை அனைத்து இடங்களிலும் வரிசைகள்.
ஏன் இந்த அப்பாவிகளை மட்டும் வரிசையில் நிற்க வைக்கின்றீர்கள். வரிசையில் நிற்க வைக்க வேண்டாம். அது அநீதி. உங்களை ஏன் ஆட்சி அமர்த்தினோம், அழகான நாட்டை உருவாக்குவதற்கு. ஆட்சியில் இருக்கும் அனைவரும் உலக மகா திருடர்கள். ஏன் கொள்ளையிடுகின்றனர் என்றுமே மக்களின் பணத்தை கொள்ளையிட வேண்டாம். தத்தமது வயிற்றை பாருங்கள். நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மனுஷர்களை சமமானவர்களாக கருதுங்கள். ஏன் இப்படியானவை நடக்கின்றன. அவற்றை செய்ய இடமளிக்க வேண்டாம்.
நாட்டை ஆட்சி செய்யும் தலைவர் ஜனாதிபதியிடம் கோருகிறேன். எப்போது மருத்துவமனைகளில் மக்கள் வரிசையில் நின்றனர்? மருத்துவமனைகளில் வரிசை, வேலை நிறுத்தம். ஏன் இது. நாட்டு தலைவரின் பலத்தை பலமிழக்க செய்யும் சிலர் இருக்கின்றனர்.
நாட்டை ஆட்சி செய்யும் தலைவர் என்ற வகையில் நாட்டை சரியான வழியில் கொண்டு செல்லுங்கள். காலையில் இருந்து இந்த வரிசையில் நிற்கின்றோம். இப்போது நேரம் என்னவென்று பாருங்கள். என்னை முன்னுக்கு செல்லவிட மறுக்கின்றனர். காலிலும் வருத்தம். பசியாக இருக்கின்றது.
நாங்கள் நோயாளிகள். இங்கு வரிசையில் நிற்கின்றோம்.காலையில் சாப்பிடாமல் 8 மணிக்கு வந்தேன். வறிய அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி அநியாயம் செய்கின்றனர். நாங்கள் நோயாளிகள் மருந்து சாப்பிட வேண்டும். மருந்தும் சாப்பிடவில்லை.
நாங்கள் இங்கு நிற்கின்றோம். முடியாதவர்கள் என்றும் எம்மை முன்னுக்கும் செல்ல விடுவதில்லை. வரிசையில் வாருங்கள், வரிசையில் வாருங்கள் என்று கூறுகின்றனர். கூறி பிரயோசனமில்லை.