அரசின் சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாவதாக மஸ்தான் ஆதங்கம்
அரசாங்கத்தின் ஒவ்வொரு சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாகின்றது என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு வருகை தந்து பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையங்களை அவசரமாக திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்க அதிபர்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்ப யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் பார்வையிட்டு அதன் வேலைகளை செய்து உடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம்
அமைச்சில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து இதனை திறப்பதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளனர். நிதிக்கோரியை விடுவித்து அவசரமாக திறக்கப்படவுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு கட்டப்பட வேண்டும் என்ற பிரச்சனைக்கு மத்தியில் இந்த இடத்தில் கட்டப்பட்டு 4 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தான் அரசாங்கத்தின் உடைய ஒவ்வொரு சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாகின்றது.
எனக்கு இந்த அமைச்சு கிடைத்தமையால் அதன் ஊடாக மூடப்பட்ட பொருளாதார மத்திய
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
நான் அமைச்சராக வந்த பின் இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு இரண்டு தடவை விஜயம் செய்துள்ளேன்.
மொத்த மரக்கறி விற்பனையாளர்கள்
தற்போது இதற்கான நிதிக் கோரிக்கையை விடுவிப்பது தொடர்பில் பார்வையிடவே வந்துள்ளேன். அத்துடன் மொத்த வியாபார நிலைய வியாபாரிகள் சில கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையையும் திருப்திப்படுத்தி விவசாயிகளும் நன்மை பெறத்தக்க வகையில் தான் இதனை திறக்கவுள்ளோம்.
தற்போது மொத்த மரக்கறி விற்பனை நிலையம் உள்ள இடம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது. அதில் ஒரு கடைத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.
அதில் மொத்த மரக்கறி விற்பனையாளர்கள் தங்களுக்கு வர்த்தக நிலையங்களை கோரியுள்ளனர்.
அது தொடர்பில் சாதமாக பேசியுள்ளோம். பொருளாதார மத்திய நிலைய கடைகளுக்கு மேலதிகமாக அந்த கடைத்தொகுதியில் ஏற்படும் செலவை தந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவது தொடர்பில் பேசியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri