மூன்று நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் 12ஆம், 13ஆம் திகதிகளில் இந்த வருவாய் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
புதிய நடைமுறை
இதேவேளை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்தும் வசதி தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த வசதியானது எதிர்வரும் மே முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
