சுதந்திரக் கட்சி சென்றாலும் அரசு கவிழாது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. அவர்கள் விலகினாலும் அரசாங்கம் கவிழாது. மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவை ஆரம்பித்ததன் காரணமாவே சுதந்திரக் கட்சியினர் பாதுகாக்கப்பட்டனர்.
பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்படவில்லை என்றால், சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு செல்ல இடம் இருந்து இருக்காது.
பொதுஜன பெரமுனவை ஆரம்பித்ததன் காரணமாவே சுதந்திரக் கட்சியினருக்கு பாதுகாப்பு கிடைத்தது. இதனை மறந்து விட்டு அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னால் சென்றவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் ராஜபக்சவினரையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது புதினம் அல்ல. இவர்களில் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அப்பத்தை சாப்பிட்டு விட்டு, சென்றே ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக்கொள்ள வேண்டாம், மைத்திரியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறேன் என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam