இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் 8.26 பில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட மூன்று மானியத்திட்டங்கள்!
ஐரோப்பிய ஒன்றியம், 8.26 பில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட மூன்று மானியத்திட்டங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் நீதித் துறை, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்காகவே இந்த மானியத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மூன்று மானியங்களும் இலங்கையின் மூன்று முன்னுரிமை பகுதிகளை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் உறுதியான உதவிகளாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
இன்றைய உடன்படிக்கையின் படி நீதித்துறைக்காக 4.16 பில்லியன் ரூபாவும், உணவு பாதுகாப்புக்காக 2.31 பில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 1.79 பில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri