பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு இணங்காத நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பு வழங்க மறுத்தால் அந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு வேறும் முதலீட்டாளர்களிடம் தோட்டங்கள் ஒப்படைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்த சம்பளம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1350 ரூபாவாக உயர்த்தவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனமொன்று சம்பளத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தால் அது குறித்து விசாரணை செய்ய நிதி அமைச்சு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!](https://cdn.ibcstack.com/article/97fed5da-d239-483d-a274-ef6daf77dd5c/24-666ebd384785a-md.webp)
இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்! 19 மணி நேரம் முன்
![12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார்](https://cdn.ibcstack.com/article/93cb07d2-5d84-44cf-8acf-63a74d032d1a/24-666f131a72fd9-sm.webp)
12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார் News Lankasri
![ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக நடித்திருக்கும் மீனா.. என்ன படம் தெரியுமா? போட்டோவுடன் இதோ](https://cdn.ibcstack.com/article/a9deda15-5ab9-4147-b9c5-640782a6eefa/24-666e5716b0413-sm.webp)