மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!
மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, சவுதி அரேபியாவிற்கும் முழு மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வடேபுல் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, அங்கு தனது பிரதிநிதியை சந்தித்த பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் - புடின் கலந்துரையாடல்
அதேவேளை, மத்திய கிழக்கு பதற்றங்கள் குறித்து ரஷ்ய ஜனாாதிபதி வோலோடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் ஒரு புதிய தொலைபேசி அழைப்பில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் குறித்து விவாதித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்போது ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை புடின் கண்டித்ததாகவும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களுக்குத் திரும்புவதை இரு தலைவர்களும் நிராகரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன், இரு ஜனாதிபதிகளும் சுமார் 50 நிமிடங்கள் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் மத்திய கிழக்கின் போர்பதற்றத்தின் தீவிரத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
