தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு
தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த 24 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
நேற்று கட்சி வெளியிட்ட ‘விப்’ உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்
நேற்று(13) தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜயின் டி.வி.கே. அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக 22 பேர் வாக்களித்த நிலையில், 5 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், “கட்சியின் விப் உத்தரவை மீறி சுமார் 25 உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளனர்.
எனவே கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் பதவியை இழக்க நேரிடும்.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய மனு தாக்கல் செய்துள்ளோம்,” என்று தெரிவித்தனர்.
தகுதி நீக்கம்
மேலும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், 24 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில், கிளர்ச்சி அணியினர் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

புதிய எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தாமல் விப் நியமிக்கப்பட்டதால் அந்த நியமனம் சட்டபூர்வமல்ல என்றும், அதனை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இதுகுறித்து சி.வி. சண்முகம் கூறுகையில், “பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுவது முற்றிலும் தவறு. சட்டரீதியாக இது நிலைக்காது.
புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி சட்டமன்றக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் விப் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் ஈ.பி.எஸ். நேரடியாக விப் நியமித்துள்ளார்.அவருக்கு அந்த அதிகாரம் இல்லை,” என்றார்.
விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதிய சபாநாயகர்
இதற்கிடையில், அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விப் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை புதிய சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டியுள்ளது.
மேலும், அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் விப் தான் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் அடிப்படை அம்சம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

தற்போதைய சூழலில், இரு அணியினரும் சட்டமன்றக் குழுத் தலைமை தங்களுக்கே உரியது என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.பதவியேற்ற புதிய சபாநாயகர் இதுகுறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இறுதியில், சபாநாயகர் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam