ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதி சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை தொழில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதி சலுகை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடைநிறுத்தம்
முன்னதாக ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதி தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, குறித்த பணிகள் நிறைவடைந்துள்ளதால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்கள ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam