ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி: ஈ.பி.டி.பியின் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு
யாழ்.பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டையும், மக்களையும், சமூகத்தையும் அறிந்திராதவர்களே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும்,ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற போர்வையில் ஒரு சிறு கூட்டத்தினர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது அங்கு சென்ற சிலர் அவர்களை வெளியேறுமாறு கோசமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சிலரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தரப்பினர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த் என்ற நபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன், அக்குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.ஆனால் அச்சம்பவத்திற்கும் அங்கு கூறப்பட்ட கருத்துக்கும் அங்கு சென்றவர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
மக்களின் மனநிலை
அதேவேளை யாழ். பல்கலைக்கழக சமூகமும் குறித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது சந்திப்பை புறக்கணித்திருந்தனர்.
இதனூடாக யாழ்.கல்விச்சமூகம் மற்றும் மக்களின் மனநிலையையோ இங்குள்ள தேவைப்பாடுகளையோ குறித்த ஏற்பாட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புலனாகின்றது.
அந்த வகையில் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்த ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த்
என்ற நபர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எம்மீது சேறு பூசி தன்னை
வழிநடத்தும் தரப்பினரை திருப்திப்படுத்த முயற்சித்துள்ளமை தெளிவாக தெரிகின்றது
என்றும் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
