வாகரை பிரதேச செயலாளராக எந்திரி ஜீ.அருணன் நியமனம்
கோறளைப்பற்று வடக்கு - வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளருக்கான வரவேற்பினைத் தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் தனது பதவியினை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதிய பிரதேச செயலாளரை மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பளித்ததுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதேச செயலாளரை வரவேற்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் தனது கன்னி உரையின்போது,
"கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரைப் பிரதேசத்தினதும், இப்பகுதி மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும், சுபிட்சமான வாழ்வை ஏற்படுத்தும் பொருட்டும் நேர்மையாக தமது கடமையினை மேற்கொள்வேன்.
அதேபோல் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இப்பிரதேசத்திற்காகத்
தியாக மனப்பான்மையுடன் ஒத்துழைப்பு வழங்கி சேவையாற்ற வேண்டுமெனவும்
கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்திற்குப் புதிதாகப் பிரதேச செயலாளராகப் பதவியேற்றுள்ள இலங்கை
நிருவாக சேவை அதிகாரியான இவர் ஏற்கனவே காணி ஆணையாளர் திணைக்களத்தின்
உதவிக்காணி ஆணையாளராகவும், பொதுத்திறைசேரியின் தேசிய திட்டமிடல்
திணைக்களத்தின் உதவி அத்தியட்சராகவும், கிரான், ஆரையம்பதி, பட்டிப்பளை,
மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகக்
கடமையாற்றியுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி
ஆணையாளராகவும் தனது சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022