பசுமையான நினைவுகளை அழகாய் கொண்டு வரும் “எங்கட ஊர்”
எங்கள் ஊரில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை அழகாய் கொண்டு வந்திருக்கிறது “எங்கட ஊர்”.
எங்கட ஊர் பாடலானது ஈழத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையிலும், கவிப்புலவர் வேலணையூர் சுரேஸின் வரிகளிலும், இளம்பாடகர் கோகுலன் சாந்தனின் குரலிலும், இயக்கத்திலும், A.K.கமலின் ஒளிப்பதிவிலும் வெளிவந்திருக்கிறது.
பாடலின் படத்தொகுப்பு A.S.பிரசாத், நடன அமைப்பு கிறிஸ்ரியன் மதி, தயாரிப்பு மற்றும் முகாமை உதவி இயக்கம் சுவீகரன், A.S.K.கலை, இயக்கம் A.S.பிரதீப் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் அற்புதமான நடிப்பும், இசைப்பிரியனின் சிறப்பான இசையும், தத்ரூபமான இயற்கை அழகும் இணைந்து பாடலுக்கு வலுச் சேர்ந்திருக்கின்றன.