குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவித்தல்!

Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration
By Benat Jun 12, 2022 04:15 PM GMT
Report

புதிய இணைப்பு 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இம்மாதம் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 10,000 என்று அவர் கூறினார்.

இருப்பினும், கடந்த சில நாட்களில் திணைக்களம் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு நாள் சேவையின் கீழ் திணைக்களம் சராசரியாக தினமும் சுமார் 2,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாக அவர் கூறினார்.

எனினும், அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏராளமானோர் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

முதலாம் இணைப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவித்தல்! | Emergency Notification Department Immigration

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஒரு நாளின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும். அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்களை இரண்டு பணி நேரங்களின்  கீழ் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த இரண்டு பணி நேரங்களும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.

நாளையும் திணைக்களம் திறந்திருக்கும்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவித்தல்! | Emergency Notification Department Immigration

இதேவேளை, நாளை (13) வழமை போன்று திறக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (13ஆம் திகதி) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் இடையூறு இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக திணைக்களம் திறந்திருக்கும்.

அதன்படி, திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம் நாளை திறந்திருக்கும்.

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US